Friday, November 18, 2022

வேலவா வடி வேலவா சிவ பாலகா எனைச் சேரவா -இந்துமகேஷ்

 


வேலவா வடி வேலவா - சிவ

பாலகா எனைச் சேரவா


காலக் கருவறையில் கோலம் வரைந்துகொண்டு 

காத்திருந்தேன்  முருகா காத்திருந்தேன்

ஞாலம் பிறந்ததென்று நானும் பிறந்துவந்து 

பார்த்திருந்தேன் உனை பார்த்திருந்தேன்


வேலவா வடி வேலவா - சிவ

பாலகா எனைச் சேரவா


வாழும் வகை இதென்று தேரும் அறிவிழந்து 

சேர்த்திருந்தேன் சொந்தம் சேர்த்திருந்தேன்

நாளும் பொழுதும் இன்பம்தேடி அலைந்து தினம் 

வேர்த்திருந்தேன் உடல் வேர்த்திருந்தேன்


வேலவா வடி வேலவா - சிவ

பாலகா எனைச் சேரவா


வாடும் எனது உடற்கூடும் கலைவதற்குள் 

பாடுகின்றேன்  உன்னை பாடுகின்றேன்

பாடும் எனது தமிழ் ஆடும் உனது மயில் 

ஓடுதையா வினை ஓடுதையா


வேலவா வடி வேலவா - சிவ

பாலகா எனைச் சேரவா


வேலுண்டு வினை தீர்க்க

வேலுண்டு எனைக் காக்க

வேலுண்டு  பயம் இல்லை 

வேலுண்டு துயர் இல்லை

ஆடுகிறேன் மகிழ்ந் தாடுகிறேன்


வேலவா வடி வேலவா - சிவ

பாலகா எனைச் சேரவா


- இந்துமகேஷ்


No comments:

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...