Thursday, November 17, 2022

கணநாதா கண்பாராய்!








கணநாதா கண்பாராய்! 
- இந்துமகேஷ்

சீர்பொலியும் ஜெர்மனியின் 
வடதிசையில் தலம் கொண்டாய்.
திருவடியைச் சரண்புகுந்தோம் 
சிவபாலா காத்தருள்வாய்.

பார்படைத்துக் காக்கின்ற 
பரமன் திருமகனே
பாதமலர் பற்றுகிறோம்- 
கணநாதா கண்பாராய்!

சித்தி விநாயகனே!
வர சித்தி விநாயகனே!
அருள்தரு வர சித்தி விநாயகனே

பேரருளைப் பொழிகின்ற
பிரணவனே! ஐங்கரனே !
ஞானவடி வானவனே!
ஞாலமிதைக் காப்பவனே!

சித்தி விநாயகனே!
வர சித்தி விநாயகனே!
அருள்தரு வர சித்தி விநாயகனே!

உன்னடியே துணை என்று
உருகியுனைச் சரணடைந்தோம்!
மாமணியே கணபதியே
வந்தருள்வாய் குணநிதியே!

சித்தி விநாயகனே!
வர சித்தி விநாயகனே!
அருள்தரு வர சித்தி விநாயகனே!

தெள்ளுதமிழ்ப் பாட்டிசைக்கும்
தேசமதைத் தாண்டிவந்தோம்
ஜெர்மனியில் பிறேமனில் உன்
திருமுகத்தைக் கண்டுநின்றோம்!

சித்தி விநாயகனே!
வர சித்தி விநாயகனே!
அருள்தரு வர சித்தி விநாயகனே!

அள்ள அள்ளக் குறையாத
அருளமுதை ஊட்டுகின்றாய்
அன்புமலர் நாம்தொடுத்தோம்
ஆண்டருள வேண்டுமையா!

சித்தி விநாயகனே!
வர சித்தி விநாயகனே!
அருள்தரு வர சித்தி விநாயகனே!

-இந்துமகேஷ்

No comments:

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...