Friday, May 02, 2014
இனிமேல் பிறவா வரம்நீ அருள்வாய்!
இதுவோ அதுவோ எதுவோ
இனியோர் பிறவி வருமோ!
எனையாள்பவனே
உமையாள் மகனே
இனிமேல் பிறவா
வரம் நீ அருள்வாய் - வடிவேலவனே!
பிறவிப் பிணிசேர்
துயரம் களைவாய்
பெருமா யையிலே
சிதையா தருள்வாய் - சிவனார் மகனே!
மனமே அசுரர் வசமாய்க் கிடந்தேன்
வலியும் துயரும் தினமும் சுமந்தேன்!
அசுரர் தமையே அழித்தே அருளும்
குமரா! உனை நான் பணிந்தேன் தெளிந்தேன்!
எனையாள் குகனே! உமையாள் மகனே!
இருள்சூழ் உலகில்
இனிமேல் பிறவா
வரம் நீ அருள்வாய் - வடிவேலவனே!
புவிமேல் வாழ்வு பொய்யாய் அறிந்தேன்!
புகழும் இகழும் சமமாய் உணர்ந்தேன்!
உருவாய் வந்தென் உளம் நீ புகுந்தாய்
அருவாய் வருவேன் பிரியா தருள்வாய்!
எனையாள் குகனே! உமையாள் மகனே!
இருள்சூழ் உலகில்
இனிமேல் பிறவா
வரம் நீ அருள்வாய் - வடிவேலவனே!
அழகா! குமரா! அமரர் தலைவா!
மயில்வாகனனே! வடிவேல் முருகா!
எனையாள் குகனே! உமையாள் மகனே!
இருள்சூழ் உலகில்
இனிமேல் பிறவா
வரம் நீ அருள்வாய் - வடிவேலவனே!
-இந்துமகேஷ்
02.05.2014
Subscribe to:
Posts (Atom)
என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.
என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...
-
நீராடும் கண்களிலே நிழலாடும் தாய்மடியை நினைவூட்ட வந்த அழகே! நிலைமாறும் வாழ்வினிலே நிலையாக நின்னருளை நித்தமும் பொழியும் மழையே! சீரோ...
-
துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன் துதிக்கையான் திருக்கோயில் தனை நாடினேன் -இந்துமகேஷ் துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன் துதிக்கையான் திர...
-
பிரியாத வரம் ஒன்று கேட்டேன் புரியாத வாழ்வுக்குப் பொருளான குமரா - உன்னைப் பிரியாத வரம் ஒன்று கேட்டேன். இருள் மாய வினை நீக்கி அருள் ஞான ஒளிய...