Friday, May 02, 2014

இனிமேல் பிறவா வரம்நீ அருள்வாய்!




இதுவோ அதுவோ எதுவோ
இனியோர் பிறவி வருமோ!

எனையாள்பவனே
உமையாள் மகனே
இனிமேல் பிறவா
வரம் நீ அருள்வாய் - வடிவேலவனே!

பிறவிப் பிணிசேர்
துயரம்  களைவாய்
பெருமா யையிலே
சிதையா தருள்வாய் - சிவனார் மகனே!

மனமே அசுரர் வசமாய்க் கிடந்தேன்
வலியும் துயரும் தினமும் சுமந்தேன்!
அசுரர் தமையே அழித்தே அருளும்
குமரா!  உனை நான் பணிந்தேன் தெளிந்தேன்!

எனையாள் குகனே! உமையாள் மகனே!
இருள்சூழ் உலகில்
இனிமேல் பிறவா
வரம் நீ அருள்வாய் - வடிவேலவனே!

புவிமேல் வாழ்வு பொய்யாய் அறிந்தேன்!
புகழும் இகழும் சமமாய் உணர்ந்தேன்!
உருவாய் வந்தென் உளம் நீ புகுந்தாய்
அருவாய் வருவேன் பிரியா தருள்வாய்!

எனையாள் குகனே! உமையாள் மகனே!
இருள்சூழ் உலகில்
இனிமேல் பிறவா
வரம் நீ அருள்வாய் - வடிவேலவனே!

அழகா! குமரா! அமரர் தலைவா!
மயில்வாகனனே! வடிவேல் முருகா!

எனையாள் குகனே! உமையாள் மகனே!
இருள்சூழ் உலகில்
இனிமேல் பிறவா
வரம் நீ அருள்வாய் - வடிவேலவனே!



-இந்துமகேஷ்
02.05.2014

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...