Monday, November 24, 2008

எழுந்தெம்மைக் காத்திட வா!














வேல்முருகா வேல்வேல் வேல்முருகா!
வேல்முருகா வேல்வேல் வேல்முருகா
வேல்முருகா வேல்வேல் வேல்முருகா!

கதிர்காம மலைஏறி காவடிகள் ஏந்திவந்து
காலடியில் காத்திருந்தோம் அய்யா முருகய்யா
கண்குளிரக் கண்டுமனம் களிக்கின்ற வேளையிலே
காலம்நம்மை விரட்டியதேன் அய்யா முருகய்யா!

கற்பூரச் சட்டியிலே உள்ளங்களை உருகவிட்டுக்
கருணைக்காகக் காத்திருந்தோம் அய்யா முருகய்யா
அற்புதங்கள் செய்யும்உந்தன் அருளைநாங்கள் பருகுமுன்னம்
அகதிகளாய் மாறியதேன் அய்யா முருகய்யா!

நல்லூரின் வீதியெல்லாம் நடைநடையாய் நடந்துநாங்கள்
நல்லருளை வேண்டிநின்றோம் அய்யா முருகய்யா
எல்லோர்க்கும் வாழ்வளிக்கும் எங்கள் குலதெய்வமே நீ
ஏனருளைத் தரமறந்தாய் அய்யா முருகய்யா!

பொல்லாத பகையோடு துயர்வந்து புகுந்தாலும்
பொன்னடியை நீங்கமாட்டோம் அய்யா முருகய்யா
இல்லாத இடமில்லை எங்கும் நிறைந்தவன் நீ
எழுந்தெம்மைக் காத்திடவா அய்யா முருகய்யா!



-இந்துமகேஷ்
27.06.2004

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...