Monday, October 17, 2011
எமையாளும் பரமேஸ்வரி
ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி - இந்த
ஜெகம் ஆளும் புவனேஸ்வரி!
ஊராள உலகாள உனையாள எனை ஆள
உறவாகி வந்தாளடி! ஒளியாகி நின்றாளடி!
ஒன்றாகிப் பலவாகி ஒவ்வொன்றும் தானாகி
நின்றாளும் ஜெகதீஸ்வரி! நிலையான ஜோதீஸ்வரி!
ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி - இந்த
ஜெகம் ஆளும் புவனேஸ்வரி!
மண்ணாகி விண்ணாகி வளியாகி ஒளியாகி
புனலான சிவனேஸ்வரி! பொறியாளும் ஞானேஸ்வரி!
எண்ணாகி எழுத்தாகி எழுத்துக்குள் பொருளாகி
எமையாளும் பரமேஸ்வரி! எழிலான பாலேஸ்வரி!
ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி - இந்த
ஜெகம் ஆளும் புவனேஸ்வரி!
தீராத வினையாவும் தீர்த்தெம்மைக் காக்கின்ற
தாயெங்கள் நாகேஸ்வரி! தருவாளே மனநிம்மதி!
திசைமாறிப் போனாலும் எமைவிட்டு நீங்காமல்
சேர்வாளே சர்வேஸ்வரி! சிவனாரின் லிங்கேஸ்வரி!
ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி - இந்த
ஜெகம் ஆளும் புவனேஸ்வரி!
இந்துமகேஷ்
(01.03.2008)
அனைத்துயிரும் காத்திடுவாய் ஆதிபராசக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
உலகமெல்லாம் காத்து நிற்கும் மகாசக்தி ஓம்!
சர்வமுமாய் நிற்பவளே ஆதி பரா சக்தி
சாந்திதரும் மாமருந்தே ஆதி பரா சக்தி
எவ்வுயிர்க்கும் உயிரானாய் ஆதி பரா சக்தி
எல்லையில்லா ஆனந்தமே ஆதி பரா சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
உலகமெல்லாம் காத்து நிற்கும் மகாசக்தி ஓம்!
சொல்லாகிப் பொருளானாய் ஆதி பரா சக்தி
தூயதமிழ் சுவையானாய் ஆதி பரா சக்தி
கல்லும்நீ கனியும்நீ ஆதி பரா சக்தி
காற்றும்நீ கடலும்நீ ஆதி பரா சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
உலகமெல்லாம் காத்து நிற்கும் மகாசக்தி ஓம்!
என்னுயிர்நீ உடலும்நீ ஆதி பரா சக்தி
என்னுள்ளே வாழ்பவள் நீ ஆதி பரா சக்தி
என்தாய்நீ தந்தையும் நீ ஆதி பரா சக்தி
எனதுறவு யாவையும் நீ ஆதி பரா சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
உலகமெல்லாம் காத்து நிற்கும் மகாசக்தி ஓம்!
வாழ்வும்நீ தாழ்வும்நீ ஆதி பரா சக்தி
வருவதெல்லாம் தருபவள் நீ ஆதி பரா சக்தி
நாளும் நீ பொழுதும் நீ ஆதி பரா சக்தி
நலமெல்லாம் தருபவள் நீ ஆதிபராசக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
உலகமெல்லாம் காத்து நிற்கும் மகாசக்தி ஓம்!
வானும் நீ மண்ணும் நீ ஆதி பரா சக்தி
வாழ்வாகி வந்தவள் நீ ஆதி பரா சக்தி
தானம் நீ தவமும் நீ ஆதி பரா சக்தி
சகலமுமாய் நிற்பவளே ஆதி பரா சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
உலகமெல்லாம் காத்து நிற்கும் மகாசக்தி ஓம்!
வேண்டியதைத் தருபவளே ஆதி பரா சக்தி
வேதனைகள் தீர்த்திடுவாய் ஆதி பரா சக்தி
ஆண்டருள்வாய் அம்மா நீ ஆதி பரா சக்தி
அனைத்துயிரும் காத்திடுவாய் ஆதி பரா சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
உலகமெல்லாம் காத்து நிற்கும் மகாசக்தி ஓம்!
- இந்துமகேஷ்
(01.03.2008)
Subscribe to:
Posts (Atom)
என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.
என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...
-
நீராடும் கண்களிலே நிழலாடும் தாய்மடியை நினைவூட்ட வந்த அழகே! நிலைமாறும் வாழ்வினிலே நிலையாக நின்னருளை நித்தமும் பொழியும் மழையே! சீரோ...
-
துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன் துதிக்கையான் திருக்கோயில் தனை நாடினேன் -இந்துமகேஷ் துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன் துதிக்கையான் திர...
-
பிரியாத வரம் ஒன்று கேட்டேன் புரியாத வாழ்வுக்குப் பொருளான குமரா - உன்னைப் பிரியாத வரம் ஒன்று கேட்டேன். இருள் மாய வினை நீக்கி அருள் ஞான ஒளிய...