Sunday, August 13, 2023

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.


என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.



-இந்துமகேஷ்


முருகா முருகா  முருகா!

அருவே உருவே எனதாருயிரே

உருகும் மனதுள் உறையும் திருவே

முருகா முருகா முருகா!


உன்னை நினைந்து நினைந்து

நெஞ்சம் நெகிழ்ந்து நெகிழ்ந்து

கண்கள் கசிந்து கசிந்து

உன்னில் கலந்தேன்


உன்னில் கலந்து கலந்து

அன்பில் கரைந்து கரைந்து

என்னை மறந்து மறந்து 

உயிர் வளர்த்தேன்


முருகா முருகா  முருகா!

அருவே உருவே எனதாருயிரே

உருகும் மனதுள் உறையும் திருவே

முருகா முருகா முருகா!


உயிர் வளர்த்து வளர்த்து

உடல் சலித்து சலித்து

மனம் தவித்து தவித்து

மண்ணில் பிறந்தேன்


மண்ணில் பிறந்து பிறந்து

துன்பம் சுமந்து சுமந்து

என்னை இழந்து இழந்து

உன்னை அறிந்தேன்


முருகா முருகா  முருகா!

அருவே உருவே எனதாருயிரே

உருகும் மனதுள் உறையும் திருவே

முருகா முருகா முருகா!


உன்னை அறிந்து அறிந்து

உண்மை உணர்ந்து உணர்ந்து

உள்ளம் தெளிந்து தெளிந்து

உன்னை நினைந்தேன்


முருகா முருகா  முருகா!

அருவே உருவே எனதாருயிரே

உருகும் மனதுள் உறையும் திருவே

முருகா முருகா முருகா!


-இந்துமகேஷ்

(மாசி 2023)



Friday, February 17, 2023

பிரியாத வரம் ஒன்று கேட்டேன் -இந்துமகேஷ்

 




பிரியாத வரம் ஒன்று கேட்டேன்

புரியாத வாழ்வுக்குப் பொருளான குமரா - உன்னைப்

பிரியாத வரம் ஒன்று கேட்டேன்.


இருள் மாய வினை நீக்கி

அருள் ஞான ஒளியேற்றி

 எனை ஆளும் முருகா உன்

திருநாமம் தினம் பாடி

பிரியாத வரம் ஒன்று கேட்டேன்


பிரியாத வரம் ஒன்று கேட்டேன்

புரியாத வாழ்வுக்குப் பொருளான குமரா - உன்னைப்

பிரியாத வரம் ஒன்று கேட்டேன்.


இறவாமல் பிறவாமல் இகவாழ்வில் சுழலாமல்

மறைஞானப் பொருளோனே

மயிலேறும் பெருமானே

பிரியாத வரம் ஒன்று கேட்டேன்


பிரியாத வரம் ஒன்று கேட்டேன்

புரியாத வாழ்வுக்குப் பொருளான குமரா - உன்னைப்

பிரியாத வரம் ஒன்று கேட்டேன்.


நிலையான வாழ்வுக்குப் பொருளானவா

நீங்காது என்நெஞ்சில் நிலையானவா

அலைமீது துரும்பான எனைக் காக்கவா

அருள்பொங்கும் சிவபாலா வரம் ஒன்று தா!


பிரியாத வரம் ஒன்று கேட்டேன்

புரியாத வாழ்வுக்குப் பொருளான குமரா - உன்னைப்

பிரியாத வரம் ஒன்று கேட்டேன்.


-இந்துமகேஷ்

(தை - 2023)

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...