Friday, November 18, 2022

துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன் -இந்துமகேஷ்


துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன்
துதிக்கையான் திருக்கோயில் தனை நாடினேன்
-இந்துமகேஷ்



துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன்
துதிக்கையான் திருக்கோயில் தனை நாடினேன்
கதியாகி கணநாதன் எனைத் தாங்கினான்
கர்மவினை தீர்த்தெனது விதிமாற்றினான்
வேழமுகம்  பிரணவத்தின் வெளித்தோற்றமே
மெய்ஞானம் காண்பதற்கு வழிகாட்டுமே
காலமெல்லாம் கணபதியின் புகழ்பாடுவேன்
காலடியே தஞ்சமென்று கரையேறுவேன்
சிவனார் திருமகனே வர சித்திவிநாயகனே
பவவினைகள் நீக்கி அருள் பாலிக்கும் ஐங்கரனே
தவமறியாச் சிறியேன் நான்
தாழ்பணிந்தேன் சரணமையா
கணபதியே கற்பகமே காருண்யா காத்தருள்வாய்.
மனமுருகிட விழிபெருகிட 
உனைநினைந்திட        வினைகெடும்
தினம் வழிபட துயர் பொடிபடும் 
உனதிரு அடி துணைவரும் 
ஓம் கணநாதா ஓம் ஓம் கணநாதா ஓம்


பாடலாசிரியர்:
இந்துமகேஷ்

No comments:

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...