Monday, December 08, 2008
எங்கள்நிலம் காத்தருளவா!
ஏற்றிய தீபங்கள் தீபங்கள் அல்ல
எங்கள் மனமல்லவா! - அதில்
தெரிகின்ற ஒளி உந்தன் முகமல்லவா!
துன்ப - இருள் நீக்கவா-
சூழும் இடர் போக்கவா- எங்கள்
மனமாளும் வடிவேலவா!
கார்த்திகை தீபங்கள் ஏற்றிவைத்தோம்!
கந்தா உன் பொன்னடி போற்றிநின்றோம்!
காத்தருள்வாய் என்று வேண்டுகின்றோம்
கண்ணீரில் மாலைகள் சூட்டுகின்றோம்!
வேழமுகம் கொண்ட நாதன் தம்பியல்லவா
ஈழமதன் துயர்நீக்கி எம்மைக் காக்கவா!
நாளும் உந்தன் புகழ்பாடி நாங்கள் தொழுதோம்
நாயகனே நீ எழுந்து அருள் செய்யவா!
உன்னையன்றி தஞ்சமினி வேறிடமில்லை
உருகுகிறோம் எங்கள் முகம் பார்த்தருளவா!
மண்ணுலகை வாழவைக்கும் தெய்வமல்லவா
வடிவழகா எங்கள் நிலம் காத்தருள வா!
-இந்துமகேஷ்
(கார்த்திகை 2004)
Subscribe to:
Posts (Atom)
என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.
என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...
-
நீராடும் கண்களிலே நிழலாடும் தாய்மடியை நினைவூட்ட வந்த அழகே! நிலைமாறும் வாழ்வினிலே நிலையாக நின்னருளை நித்தமும் பொழியும் மழையே! சீரோ...
-
துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன் துதிக்கையான் திருக்கோயில் தனை நாடினேன் -இந்துமகேஷ் துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன் துதிக்கையான் திர...
-
பிரியாத வரம் ஒன்று கேட்டேன் புரியாத வாழ்வுக்குப் பொருளான குமரா - உன்னைப் பிரியாத வரம் ஒன்று கேட்டேன். இருள் மாய வினை நீக்கி அருள் ஞான ஒளிய...