Thursday, May 17, 2007

என்னில் கலந்திடவே வருவாய்!










உருகி உருகி கண்ணீர்
பெருகிப் பெருகி உந்தன்
அருளைத் தேடுகிறேன் முருகா!- நீ
அருகில் அருகில் என்று வருவாய்?
அருகில் அருகில் என்று வருவாய்?


அருகில் அருகில் வர
வினைகள் கருகிவிடும்
பிறவிப் பயன்பெறுவேன் முருகா! - நீ
அருளைப் பொழிய என்று வருவாய்?

அருளைப் பொழிய என்று வருவாய்?
அருளைப் பொழிய மனம்
இருளைக் களையும் உந்தன்
அடியில் நிலைத்திடுவேன் முருகா! - நீ
அபயம் வழங்க என்று வருவாய்?

அபயம் வழங்க என்று வருவாய்?
அபயம் வழங்க எந்தன்
துயர்கள் கரையும் உந்தன்
ஒளியில் எனைக் கரைப்பேன் முருகா!- நீ
உயிரின் உயிரெனவே வருவாய்!
உயிரின் உயிரெனவே வருவாய்!


உயிரின் உயிரென உன்
உறவில் கலந்த பின்னே
எனதென் றெதுவுமில்லை முருகா! - நீ
என்னில் கலந்திடவே வருவாய்!
என்னில் கலந்திடவே வருவாய்!



-இந்துமகேஷ்
16.08.2004

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...