Sunday, April 10, 2022

முக்கண்ணாலே மூவுலகாளும் - இந்துமகேஷ்





தனியாக நின்றேன் துணையாக வந்தாய்

தவமேதும் புரியாத எனை ஆண்டுகொண்டாய்

இனியுன்னைப் பிரியாத வரம் ஒன்று கேட்டேன்

எனை ஆளும் வடிவேலா! அருள் செய்ய வாவா!


முக்கண்ணாலே மூவுலகாளும்

அப்பன் மகனே சுப்பையா

முன்னைப் பின்னை வினைகள் நீங்க

முன்வந் தருள்வது எப்பையா?


பக்திக் கிரங்கி அருள்தரும் பரமன்

பாதந் தனையே பணிந்தேனே

முக்திக் கொருவன் முருகா என்றுனை

பற்றித் தொழவே வைத்தானே


சங்கரன் பாலகா ஐங்கரன் சோதரா

இங்குமாய் அங்குமாய் எங்குமே நின்றவா

சந்ததம் உன்பதம் பற்றினால் வெற்றி நம்

பக்கமே நிற்குமே துக்கமேன் இக்கணம்?


துக்கம் நீங்கி சுகப்பட வைக்கும்

சுந்தர வேலா முருகய்யா

சூரர்போலப் பகை வந்தாலும்

துடைத் தெமைக் காப்பவன் நீயையா!


சக்தீ சக்தீ என்றழைத் தாலே

தாயாய் வருவாள் உன் அன்னை

சக்தி சக்தி சக்திவேல் என்றே  

சரண் புகுந்தேனே நான் உன்னை


திக்குத் திசைகள் தெரியாதலையும்

சேயெனைக் காக்க வருவாயா

சிக்கல் எனுமோர் மாயையை நீக்கி

திருவடி நிழலைத் தருவாயா?


அன்னை நீ அப்பன் நீ அறிவெனும் குருவும் நீ

முன்னை நீ பின்னை நீ முற்றுமென் பற்று நீ

என்னை நீ ஏற்றபின் ஏதொரு பயமினி

ஏறிடும் மயிலினி என்மனம் அறிக நீ.



முருகா முருகா முருகா

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...