Tuesday, August 13, 2013

போற்றுகிறோம் தருக துணையே!






நீராடும் கண்களிலே நிழலாடும் தாய்மடியை
நினைவூட்ட வந்த அழகே!
நிலைமாறும் வாழ்வினிலே நிலையாக நின்னருளை
நித்தமும் பொழியும் மழையே!
சீரோடு வாழ்ந்தவர்கள் தெருவோடு வந்தாலும்
தீமைகளில் காக்கும் உமையே!
செய்வினைகள் வேரறுக்க தேரேறி வந்தருள்வாய்
ஸ்ரீ இராஜ ராஜேஸ் வரியே!

பாரோடு விண்ணாளும் பரமனவன் துணையாகி
பல்லுயிரும் படைத்த ஒளியே!
பக்திக்குள் ஆழ்ந்தமனம் முக்திக்குள் வீழ்வதற்கு
பாதையினைத் தந்த உயிரே!
போராடும் வாழ்வுக்குள் புதையுண்டு போகாமல்
புதுப்பாதை காட்டும் அருளே!
பூவுலகில் மாந்தரெலாம் ஓருறவாய் நின்றுன்னைப்
போற்றுகிறோம் தருக துணையே!

-இந்துமகேஷ்.


/பிரசுரம்: சிவத்தமிழ்)


என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...