Friday, September 01, 2006

பற்றினேன் உன்னடி..










பித்துப் பிடித்ததய்யா எனக்கோர்
பித்துப் பிடித்ததய்யா!
பித்துப் பிடித்ததய்யா எனக்கோர்
பித்துப் பிடித்ததய்யா

முத்தய்யா முருகய்யா கந்தய்யா வேலய்யா
பக்தியால் நானுன்னைப் பாடினேன் கேளய்யா!

சித்தம் தெளிவுற தீமைகள் மாய்ந்திட
பற்றறுத்தே எந்தன் பாவங்கள் நீங்கிட
உற்ற துணையாக உன்னைநான் கண்டபின்
பெற்றிடும் பேறது வேறெது சொல்லய்யா!


நித்திரை நீங்கினேன் புத்துயிர் தாங்கினேன்
நித்தமும் உன்னருள் பெற்றிட ஏங்கினேன்
பற்றினேன் உன்னடி பாசங்கள் நீங்கினேன்
முற்றிலும் நீயென மூச்சினை வாங்கினேன்!

கற்றவை பெற்றவை உற்றவை யாவிலும்
பட்டவை போதுமென் றெட்டியே ஓடினேன்
விட்டவை பொய்யென வேலனே மெய்யென
பற்றுவைத் தேயுனைப் பார்க்கிறேன் ஐயனே!

மாடிமனை பொருள் கோடி சுகங்களும்
வேடம்என் றாகிடும் வேளையும் வந்திடும்
ஆடிமுடிக் குமுன் ஞானக் கொழுந்தினைப்
பாடிப் பணிந்திடும் பாக்கியம் தந்தனை!

இந்துமகேஷ்
25.03.2004

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...