Thursday, August 19, 2010

ஆண்டருள வேண்டுமையா ஆறுமுகசாமி

















அலங்கார ரூபனாய் ஒருபொழுது வருவாய்

அடுத்தநொடிப் பொழுதினிலே ஆண்டியாய் நிற்பாய்

விளங்காத வாழ்வுக்குப் பொருளாகி நின்றாய்

வேலவனே இவ்வுலகம் நிலையில்லை என்றாய்




நீலமயில் மேல்வருவாய் ஆறுமுக சாமி

நின்னடிகள் பட்டதனால் சுற்றுதடா பூமி

கோலமயில் ஆனதடா சுற்றுகின்ற பூமி

குமரன் உன்னைக் கண்டதனால் மீண்டதெந்தன் ஆவி






தன்னைச்சுற்றி உன்னைச் சுற்றும் சக்கரம்தான் பூமி

சண்முகனே உன்னைச் சுற்றத் தவிக்கும் எந்தன் ஆவி

உன்னைச் சுற்றும் என்னைப்பற்றி உணாந்ததில்லைப் பூமி

உணர்ந்தபின்னும் அருள்வழங்க மறக்கலாமோ சாமி




கோடிமாந்தர் வந்துபோகும் வீடு இந்தப் பூமி

குருபரனே உனை நினைத்தோர் எத்தனைபேர் சாமி

ஆடிவிட்டுப் போகச் சொல்லி அடம்பிடிக்கும் பூமி

ஆட்டம் ஓய்ந்து போவதற்குள் அருள்தருவாய் சாமி





சாமி எங்கள் சாமி

சண்முகனாம் சாமி

அழகழகாய்க் கோலம்கொண்டு

ஆண்டருளும் சாமி

ஆண்டியென நின்றாலும்

அருள்வழங்கும் சாமி

ஆண்டருள வேண்டுமையா

ஆறுமுக சாமி

அடைக்கலமாய் வந்துநின்றோம்

அருள்தருவாய் சாமி



-இந்துமகேஷ்

(16.11.2004 பகல்)

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...