Friday, June 12, 2009

மண்ணுலகைக் காப்பவன்தான் எங்கள் குருசாமி









குருவாகி வந்தருள்வாய்
குகனே சண்முகனே
குன்றம்வளர் பேரொளியே
தாள்பணிந்தோம் சரணம்!


தங்கவடிவேலன் அவன் எங்கள் குருசாமி
சங்கரியாள் பாலன் அவன் எங்கள் குருசாமி
சங்கடங்கள் தீர்த்தருள்வான் எங்கள் குருசாமி
சஞ்சலங்கள் நீக்கிடுவான் எங்கள் குருசாமி

அண்டிவந்தால் ஆதரிப்பான் எங்கள் குருசாமி
ஆண்டருள வந்திடுவான் எங்கள் குருசாமி
மண்டியிட்டால் வாழ்வளிப்பான் எங்கள் குருசாமி
மண்ணுலகைக் காப்பவன்தான் எங்கள் குருசாமி

ஓம்முருகா என்று சொன்னால் எங்கள் குருசாமி
ஓடிவந்து துணைபுரிவான் எங்கள் குருசாமி
யாமிருக்கப் பயம் எதற்கு என்பான் குருசாமி
நல்லவர்க்கு நலம் அருள்வான் எங்கள் குருசாமி


-இந்துமகேஷ்
2004.

Friday, June 05, 2009

திருநாள் அதிலே முழுதாய் வாழ்வேன்!











தேடித் தேடிக் காத்திருந்தேன்
சிவசக்திக் குமரய்யா! - உன்
திருவடி காணத் தவம் கிடந்தேன்
சிவசக்திக் குமரய்யா!

பாடிப் பாடித் தோத்தரித்தேன்
சிவசக்திக் குமரய்யா! - உன்
பன்னிருவிழியைப் பார்த்திருந்தேன்
சிவசக்திக் குமரய்யா!

ஆடிப் பாடக் காலம் இல்லை
சிவசக்திக் குமரய்யா! - உன்
அருளைத் தந்தால் களித்திருப்பேன்
சிவசக்திக் குமரய்யா!

நாடிச் செல்லயாரும் இல்லை
சிவசக்திக் குமரய்யா!-உன்
நல்லடி பற்றி நலம்பெறுவேன்
சிவசக்திக் குமரய்யா!

கூடும் ஆசை ஏதும் இல்லை
சிவசக்திக் குமரய்யா! -உன்
குறுநகை கண்டால் மகிழ்ந்திருப்பேன்
சிவசக்திக் குமரய்யா!


சூடும் மலரில் ஒன்றாவேனோ
சிவசக்திக் குமரய்யா - உன்
சுந்தரத் தோளில் இளைப்பாறேனோ
சிவசக்திக் குமரய்யா!

வருவாய் வருவாய் என்றிருந்தேன்
சிவசக்திக் குமரய்யா! -உன்
வரவில் நானும் உயிர்த்திருப்பேன்
சிவசக்திக் குமரய்யா!

ஒருநாள் உனைநான் கண்டால்போதும்
சிவசக்திக் குமரய்யா!
திருநாள் அதிலே முழுதாய் வாழ்வேன்
சிவசக்திக் குமரய்யா!


-இந்துமகேஷ்
18.05.2004

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...