Wednesday, July 23, 2014

காத்திடுவாய் என்றும் எமையே!



















இப்பிறவி பெற்ற பலன் ஏதென்று அறியாமல்
இருந்தநாள் இறந்ததம் மா
இருவிழியில் நீர்சொரிய இணையடியைப் பற்றியபின்
இன்னல்கள் தீர்ந்ததம் மா

தப்பாதுன் சந்நதியில் சரணமென வீழ்:ந்ததனால்
சஞ்சலங்கள் தீர்ந்ததம்மா
தாயாகி வந்த அருட் காமாட்சி நின்னருளால்
தீயவினை தீய்ந்ததம் மா

பாராள்வோர் சீராளர் பாமரர்கள் எவரெனினும்
பக்தியுடன் உனைப் பணிந்தால்
நேரான வாழ்வளித்து நித்தியமாய் இன்பமுற
நின்னருளை தந்த ருளுவாய்



சீரான தேரேறி திருவுலா வருமுந்தன்
திருமுகம் காணவைத்த
சேயான பாஸ்கரர்தம் திருப்பணிகள் சிறந்திடவே
தேவி நீ பலமருள்வாய்!

சீரார்ந்த ஜெர்மனியில் திருக்கோயில் கொண்டமர்ந்து
சேய்களெமை ஆளவந்தாய்
திசையறியாப் படகாக தடம்மாறும் மனங்களுக்கு
திசையாக நீ யிருந்தாய்





கார்மேக வண்ணனவன் தங்கையென நின்றருளும்
காமாட்சி என்னும் உமையே
கனவல்ல வாழ்வென்று கருணைமுகம் தனைக் காட்டி
காத்திடுவாய் என்றும் எமையே!


அடியவன்
இந்துமகேஷ்
(2007)

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...