Friday, June 01, 2007

யாமிருக்கப் பயம் ஏன்?










யாமிருக்கப் பயம் ஏன்?
கந்தன் சொன்னது - அவன்
நல்லருளே வாழ்வுதனில்
இன்பம் என்பது



பூமியிலே நாம் வாழும்
வாழ்வு என்பது - சிறு
புல்நுனியில் பனிபோல
நீங்கிச் செல்வது


ஆம் இதற்குள் நாம் உறுதி
என்று கொள்வது -அருள்
ஆறுமுகன் சேவடியைப்
பற்றி நிற்பது


தீமைகளை விட்டுவிடும்
உள்ளம் என்பது -சிவ
செல்வமுத்துக் குமரனுக்கே
இல்லம் என்பது


ஓம்முருகா ஓம்முருகா
என்று சொல்வது -உன்
பாவவினை வேரறுக்க
என்றும் வல்லது


கொண்டதுயா் யாவும் இனி
வென்று விடலாம் -அவன்
குன்றைவிட்டு உன்னிடமே
நின்று விடலாம்


பண்டு தொட்ட பிறவிப்பிணி
விட்ட கன்றிடும் - அவன்
பாதமலா் பற்றிவிடு
பயம் அகன்றிடும்



-இந்துமகேஷ்
01.05.2004

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...