Tuesday, August 22, 2006

ஆண்டருள் செய்யப்பா!












அப்பா முருகப்பா எனை
ஆண்டருள் செய்யப்பா
தப்பா தருள்செய்தால் நான்
தாங்குவேன் உயிரப்பா

அப்பா முருகப்பா
அப்பா முருகப்பா
அப்பா முருகப்பா

முப்போதும் முருகா என்பேன்
முன்வினை தீரப்பா
எப்போதும் உன்னுட னிருக்க
இன்னருள் செய்யப்பா!

அப்பா முருகப்பா
அப்பா முருகப்பா
அப்பா முருகப்பா

பொற்பாதம் போற்றிய பின்னால்
பொய்மைகள் ஏதப்பா
இப்பாரில் எல்லா மாகி
இருப்பவன் நீயப்பா

அப்பா முருகப்பா
அப்பா முருகப்பா
அப்பா முருகப்பா

கற்போலும் மனங்களைக் கூட
கரைத்திடும் மெய்யப்பா
சொற்பூவால் மாலைகள் தொடுத்தேன்
துணைக்கரம் நீட்டப்பா

அப்பா முருகப்பா
அப்பா முருகப்பா
அப்பா முருகப்பா

இப்போது எனைப் பிரிந்தால் உனைக்
காண்பது எப்பப்பா
சுப்பா உன் திருமுகம் கண்டால்
சுகம்பெறும் உலகப்பா

அப்பா முருகப்பா
அப்பா முருகப்பா
அப்பா முருகப்பா

இந்துமகேஷ்
14.05.2004

Sunday, August 20, 2006

இணையடியில் சேர்க்கவா!











முத்துக் குமரா! முத்துக் குமரா!
முத்துக் குமரா சிவ சக்திக்குமரா!
சக்திக் குமரா! முத்துக் குமரா!

அருள்முகம் காட்டி என்னை
ஆண்டருளும் வேலவா! - என்
இருவினை நீக்கி உந்தன்
இணையடியில் சேர்க்கவா!

முத்துக் குமரா! முத்துக் குமரா!
முத்துக் குமரா சிவ சக்திக்குமரா!
சக்திக் குமரா! முத்துக் குமரா!

பொருள் புகழ் போதை என்று
போயலைந்தேன் வேலவா!- என்
பொய்மைகளை நீக்கி உந்தன்
பொன்னடியில் சேர்க்கவா!

முத்துக் குமரா! முத்துக் குமரா!
முத்துக் குமரா சிவ சக்திக்குமரா!
சக்திக் குமரா! முத்துக் குமரா!

ஆதி எது அந்தம் எது
அறிந்ததில்லை வேலவா! -என்
அகத்திருளை நீக்கி உந்தன்
அருளடியில் சேர்க்கவா!

முத்துக் குமரா! முத்துக் குமரா!
முத்துக் குமரா சிவ சக்திக்குமரா!
சக்திக் குமரா! முத்துக் குமரா!

நாதியின்றிக் கால மெல்லாம்
நானலைந்தேன் வேலவா! - என்
நலிந்தமனம் மாற்றி உந்தன்
நல்லடியில் சேர்க்கவா!

முத்துக் குமரா! முத்துக் குமரா!
முத்துக் குமரா சிவ சக்திக்குமரா!
சக்திக் குமரா! முத்துக் குமரா!


இந்துமகேஷ்
09.05.2004

Wednesday, August 16, 2006

எந்தனுக்கோர் ஞானப்பழம் என்று...








அன்னை உமை பாலகனே! ஆறுமுக வேலவனே
உன்னை எண்ணித் துதித்திருந்தேன்
ஓடிவந்து அணைப்பதெப்போ?


( இறவாமல் பிறவாமல் எனையாள்சற் குருவாகிப்
பிறவாகித் திறமான பெருவாழ்வைத் தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசற் குமரேசா
கறையானைக் கிளையோனே கதிர்காமப் பெருமாளே!- திருப்புகழ்)


பாடிவைத்தான் அருணகிரி பக்தியோடு திருப்புகழை
நாடிவந்து அருள்கொடுத்தாய்! நானழைத்தால் வாராயோ?
தேடியுன்னைச் சரணடைந்தால் தீமைகளை வேரறுப்பாய்
வாடிமனம் சோருமுன்னே வந்தருள மாட்டாயோ!

அண்ணனுக்குப் பழம்கொடுத்த அப்பனம்மை தனைப்பிரிந்து
வண்ணமயில் மீதமர்ந்து வந்து நின்றாய் பழனியிலே!
மண்ணுலகில் நான்பிறந்து வாழுகின்றேன் உனக்காக
எந்தனுக்கோர் ஞானப்பழம் என்று வந்து நீ தருவாய்!

ஆறுமுகம் ஓருருவாய் அப்பனே நான் உனையறிந்தேன்
வேறுதுணை ஏதுமில்லை வீழ்ந்து விட்டேன் உன்னடியில்
ஆறுபடை வீடமர்ந்து ஆட்சிசெய்யும் நாயகனே
தேறுதலை நீ தருவாய்! ஆறுதலை நான் தொழுவேன்!


- இந்துமகேஷ்
(15.03.2004 நள்ளிரவு)

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...