Sunday, August 20, 2006
இணையடியில் சேர்க்கவா!
முத்துக் குமரா! முத்துக் குமரா!
முத்துக் குமரா சிவ சக்திக்குமரா!
சக்திக் குமரா! முத்துக் குமரா!
அருள்முகம் காட்டி என்னை
ஆண்டருளும் வேலவா! - என்
இருவினை நீக்கி உந்தன்
இணையடியில் சேர்க்கவா!
முத்துக் குமரா! முத்துக் குமரா!
முத்துக் குமரா சிவ சக்திக்குமரா!
சக்திக் குமரா! முத்துக் குமரா!
பொருள் புகழ் போதை என்று
போயலைந்தேன் வேலவா!- என்
பொய்மைகளை நீக்கி உந்தன்
பொன்னடியில் சேர்க்கவா!
முத்துக் குமரா! முத்துக் குமரா!
முத்துக் குமரா சிவ சக்திக்குமரா!
சக்திக் குமரா! முத்துக் குமரா!
ஆதி எது அந்தம் எது
அறிந்ததில்லை வேலவா! -என்
அகத்திருளை நீக்கி உந்தன்
அருளடியில் சேர்க்கவா!
முத்துக் குமரா! முத்துக் குமரா!
முத்துக் குமரா சிவ சக்திக்குமரா!
சக்திக் குமரா! முத்துக் குமரா!
நாதியின்றிக் கால மெல்லாம்
நானலைந்தேன் வேலவா! - என்
நலிந்தமனம் மாற்றி உந்தன்
நல்லடியில் சேர்க்கவா!
முத்துக் குமரா! முத்துக் குமரா!
முத்துக் குமரா சிவ சக்திக்குமரா!
சக்திக் குமரா! முத்துக் குமரா!
இந்துமகேஷ்
09.05.2004
Subscribe to:
Post Comments (Atom)
என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.
என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...
-
நீராடும் கண்களிலே நிழலாடும் தாய்மடியை நினைவூட்ட வந்த அழகே! நிலைமாறும் வாழ்வினிலே நிலையாக நின்னருளை நித்தமும் பொழியும் மழையே! சீரோ...
-
ஒருநாள் இருநாள் உளதா வாழ்வு? உனதாய் உயிராய் நிறைந்த தென் வாழ்வு! கருவாய் மிதந்தேன் உருவாய் தவழ்ந்தேன் கழலே நினைந்து தவமே புரிந்தேன்! அழகா! க...
-
துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன் துதிக்கையான் திருக்கோயில் தனை நாடினேன் -இந்துமகேஷ் துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன் துதிக்கையான் திர...
No comments:
Post a Comment