Sunday, August 20, 2006

இணையடியில் சேர்க்கவா!











முத்துக் குமரா! முத்துக் குமரா!
முத்துக் குமரா சிவ சக்திக்குமரா!
சக்திக் குமரா! முத்துக் குமரா!

அருள்முகம் காட்டி என்னை
ஆண்டருளும் வேலவா! - என்
இருவினை நீக்கி உந்தன்
இணையடியில் சேர்க்கவா!

முத்துக் குமரா! முத்துக் குமரா!
முத்துக் குமரா சிவ சக்திக்குமரா!
சக்திக் குமரா! முத்துக் குமரா!

பொருள் புகழ் போதை என்று
போயலைந்தேன் வேலவா!- என்
பொய்மைகளை நீக்கி உந்தன்
பொன்னடியில் சேர்க்கவா!

முத்துக் குமரா! முத்துக் குமரா!
முத்துக் குமரா சிவ சக்திக்குமரா!
சக்திக் குமரா! முத்துக் குமரா!

ஆதி எது அந்தம் எது
அறிந்ததில்லை வேலவா! -என்
அகத்திருளை நீக்கி உந்தன்
அருளடியில் சேர்க்கவா!

முத்துக் குமரா! முத்துக் குமரா!
முத்துக் குமரா சிவ சக்திக்குமரா!
சக்திக் குமரா! முத்துக் குமரா!

நாதியின்றிக் கால மெல்லாம்
நானலைந்தேன் வேலவா! - என்
நலிந்தமனம் மாற்றி உந்தன்
நல்லடியில் சேர்க்கவா!

முத்துக் குமரா! முத்துக் குமரா!
முத்துக் குமரா சிவ சக்திக்குமரா!
சக்திக் குமரா! முத்துக் குமரா!


இந்துமகேஷ்
09.05.2004

No comments:

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...