Tuesday, August 22, 2006
ஆண்டருள் செய்யப்பா!
அப்பா முருகப்பா எனை
ஆண்டருள் செய்யப்பா
தப்பா தருள்செய்தால் நான்
தாங்குவேன் உயிரப்பா
அப்பா முருகப்பா
அப்பா முருகப்பா
அப்பா முருகப்பா
முப்போதும் முருகா என்பேன்
முன்வினை தீரப்பா
எப்போதும் உன்னுட னிருக்க
இன்னருள் செய்யப்பா!
அப்பா முருகப்பா
அப்பா முருகப்பா
அப்பா முருகப்பா
பொற்பாதம் போற்றிய பின்னால்
பொய்மைகள் ஏதப்பா
இப்பாரில் எல்லா மாகி
இருப்பவன் நீயப்பா
அப்பா முருகப்பா
அப்பா முருகப்பா
அப்பா முருகப்பா
கற்போலும் மனங்களைக் கூட
கரைத்திடும் மெய்யப்பா
சொற்பூவால் மாலைகள் தொடுத்தேன்
துணைக்கரம் நீட்டப்பா
அப்பா முருகப்பா
அப்பா முருகப்பா
அப்பா முருகப்பா
இப்போது எனைப் பிரிந்தால் உனைக்
காண்பது எப்பப்பா
சுப்பா உன் திருமுகம் கண்டால்
சுகம்பெறும் உலகப்பா
அப்பா முருகப்பா
அப்பா முருகப்பா
அப்பா முருகப்பா
இந்துமகேஷ்
14.05.2004
Subscribe to:
Post Comments (Atom)
என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.
என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...
-
நீராடும் கண்களிலே நிழலாடும் தாய்மடியை நினைவூட்ட வந்த அழகே! நிலைமாறும் வாழ்வினிலே நிலையாக நின்னருளை நித்தமும் பொழியும் மழையே! சீரோ...
-
ஒருநாள் இருநாள் உளதா வாழ்வு? உனதாய் உயிராய் நிறைந்த தென் வாழ்வு! கருவாய் மிதந்தேன் உருவாய் தவழ்ந்தேன் கழலே நினைந்து தவமே புரிந்தேன்! அழகா! க...
-
துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன் துதிக்கையான் திருக்கோயில் தனை நாடினேன் -இந்துமகேஷ் துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன் துதிக்கையான் திர...
No comments:
Post a Comment