Friday, November 18, 2022

கந்தனுக்கு அரோகரா- இந்துமகேஷ்








கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
கருணைமழை பொழிகின்ற அழகனுக்கு அரோகரா

ஆடினேன் பாடினேன் ஆனந்தக் கூத் தாடினேன்
தேடினேன் நாடினேன் திருவடியில் கூடினேன்
அருள்முகம் கண்டபோது ஆடினேன்
அரகரமுருகா என்று பாடினேன்
இருவினைகள் தீர்க்கும் வகை தேடினேன்
என் தலைவன் முருகன் என்று நாடினேன்
வந்தணைத்த உறவெல்லாம் வந்தவழி போயினர்
கந்தன் மட்டும் என்னிடம் காதல் கொண்டு நின்றனன்

கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
கருணைமழை பொழிகின்ற அழகனுக்கு அரோகரா

வீடிழந்து நாடிழந்து வீதிதோறும் தானலைந்து 
காடளந்து மேடளந்து கால்கள் ரெண்டும் பலமிழந்து 
வாடுகின்றபோது மனம் நாடுதே 
வந்தருள்வான் கந்தன் என்று பாடுதே
வாடுகின்ற மலராய் என் வாழ்விழந்து போகுமுன்னே
சூடுகின்ற மலராய் உன் தோள்களிலே சேர்வேனே
ஆடுகின்ற மயிலேறி அருள்புரியும் சிவபாலா
நாடும் உந்தன் அடியார்க்கு நலமருள  வா வா வா!

கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
கருணைமழை பொழிகின்ற அழகனுக்கு அரோகரா

-இந்துமகேஷ்

No comments:

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...