Saturday, August 22, 2015

எண்ணமெல்லாம் தானாகி நின்றான்


























வானவெளி தன்னில் ஒரு ஞான ஒளி வந்தது
வா முருகா என்றழைத்தேன்
வந்தணைத்துக் கொண்டது!
கானமழை நான் பொழிய ஆணையினைத் தந்தது
கந்தமுருகேசன் என்று
சிந்தையிலே நின்றது!


விண்ணிலே நீலமயில் கண்டேன் - வடி
வேல்கொண்ட முருகேசன் ஏறிவரக் கண்டேன்
கண்ணிலே அருள்மாரி கண்டேன் - உயிர்
காக்கின்ற கதிரேசன் அருகில்வரக் கண்டேன்

வண்ணமயில் விட்டிறங்கி வந்தான் -அருள்
வடிவேலன் உள்ளமெனும் மயிலேறிக் கொண்டான்
எண்ணமெல்லாம்  தானாகி நின்றான் - இனி
ஏங்காதே இணைந்திருப்பேன் எப்போதும் என்றான்

மண்ணுலகில் துயரம் இனி ஏது - குற
வள்ளியம்மை மணவாளன் துணையான போது
அண்ணலவன் தாள் பணிந்து கொள்வோம் -அவன்
அருளாலே நமைச் சூழும் வினையாவும் வெல்வோம்!


இந்துமகேஷ்
23.08.2004

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...