Friday, February 17, 2023

பிரியாத வரம் ஒன்று கேட்டேன் -இந்துமகேஷ்

 




பிரியாத வரம் ஒன்று கேட்டேன்

புரியாத வாழ்வுக்குப் பொருளான குமரா - உன்னைப்

பிரியாத வரம் ஒன்று கேட்டேன்.


இருள் மாய வினை நீக்கி

அருள் ஞான ஒளியேற்றி

 எனை ஆளும் முருகா உன்

திருநாமம் தினம் பாடி

பிரியாத வரம் ஒன்று கேட்டேன்


பிரியாத வரம் ஒன்று கேட்டேன்

புரியாத வாழ்வுக்குப் பொருளான குமரா - உன்னைப்

பிரியாத வரம் ஒன்று கேட்டேன்.


இறவாமல் பிறவாமல் இகவாழ்வில் சுழலாமல்

மறைஞானப் பொருளோனே

மயிலேறும் பெருமானே

பிரியாத வரம் ஒன்று கேட்டேன்


பிரியாத வரம் ஒன்று கேட்டேன்

புரியாத வாழ்வுக்குப் பொருளான குமரா - உன்னைப்

பிரியாத வரம் ஒன்று கேட்டேன்.


நிலையான வாழ்வுக்குப் பொருளானவா

நீங்காது என்நெஞ்சில் நிலையானவா

அலைமீது துரும்பான எனைக் காக்கவா

அருள்பொங்கும் சிவபாலா வரம் ஒன்று தா!


பிரியாத வரம் ஒன்று கேட்டேன்

புரியாத வாழ்வுக்குப் பொருளான குமரா - உன்னைப்

பிரியாத வரம் ஒன்று கேட்டேன்.


-இந்துமகேஷ்

(தை - 2023)

No comments:

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...