Monday, April 09, 2007

பொருளானேன் இன்று!















எல்லையில்லாப் பரம்பொருளின்
இணையடியைப் பற்றிவிட்டாய்
இனி உனக்கோர் குறையில்லை துயரில்லை மனமே
ஏகாந்தன் சந்நிதியில் இளைப்பாறு தினமே!


வள்ளல் குமரேசன் வரம்தந்த பின்னாலே
வாழ்வொன்று கண்டேன்
மதிமயக்கம் மறைந்ததய்யா!


நிலையில்லா வாழ்வென்று நினைந்தேனே அன்று
நீ வந்தாய் உன்னடியில் நிலையானேன் இன்று!


அலைமீது குமிழ்போலே வாழ்வென்றேன் அன்று
ஐயனே உன் அருளாலே அலையானேன் இன்று

விழிகாணும் காட்சியெல்லாம் கனவென்றேன் அன்று
வேலவனே மெய்யாயுன் விழிகண்டேன் இன்று

ஒளியில்லா மனத்தோடு உலைந்தேனே அன்று
ஓம் முருகா என் எழுந்தேன் ஒளியானேன் இன்று

அருள்காட்டும் முகம்தேடி அலைந்தேனே அன்று
ஆண்டவனே உனையறிந்தேன் அருளானேன் இன்று

பொருளில்லா காலங்கள் புதைத்தேனே அன்று
பொன்னையா உனைப்பற்றிப் பொருளானேன் இன்று

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...