Friday, June 05, 2009

திருநாள் அதிலே முழுதாய் வாழ்வேன்!











தேடித் தேடிக் காத்திருந்தேன்
சிவசக்திக் குமரய்யா! - உன்
திருவடி காணத் தவம் கிடந்தேன்
சிவசக்திக் குமரய்யா!

பாடிப் பாடித் தோத்தரித்தேன்
சிவசக்திக் குமரய்யா! - உன்
பன்னிருவிழியைப் பார்த்திருந்தேன்
சிவசக்திக் குமரய்யா!

ஆடிப் பாடக் காலம் இல்லை
சிவசக்திக் குமரய்யா! - உன்
அருளைத் தந்தால் களித்திருப்பேன்
சிவசக்திக் குமரய்யா!

நாடிச் செல்லயாரும் இல்லை
சிவசக்திக் குமரய்யா!-உன்
நல்லடி பற்றி நலம்பெறுவேன்
சிவசக்திக் குமரய்யா!

கூடும் ஆசை ஏதும் இல்லை
சிவசக்திக் குமரய்யா! -உன்
குறுநகை கண்டால் மகிழ்ந்திருப்பேன்
சிவசக்திக் குமரய்யா!


சூடும் மலரில் ஒன்றாவேனோ
சிவசக்திக் குமரய்யா - உன்
சுந்தரத் தோளில் இளைப்பாறேனோ
சிவசக்திக் குமரய்யா!

வருவாய் வருவாய் என்றிருந்தேன்
சிவசக்திக் குமரய்யா! -உன்
வரவில் நானும் உயிர்த்திருப்பேன்
சிவசக்திக் குமரய்யா!

ஒருநாள் உனைநான் கண்டால்போதும்
சிவசக்திக் குமரய்யா!
திருநாள் அதிலே முழுதாய் வாழ்வேன்
சிவசக்திக் குமரய்யா!


-இந்துமகேஷ்
18.05.2004

No comments:

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...