Friday, June 05, 2009
திருநாள் அதிலே முழுதாய் வாழ்வேன்!
தேடித் தேடிக் காத்திருந்தேன்
சிவசக்திக் குமரய்யா! - உன்
திருவடி காணத் தவம் கிடந்தேன்
சிவசக்திக் குமரய்யா!
பாடிப் பாடித் தோத்தரித்தேன்
சிவசக்திக் குமரய்யா! - உன்
பன்னிருவிழியைப் பார்த்திருந்தேன்
சிவசக்திக் குமரய்யா!
ஆடிப் பாடக் காலம் இல்லை
சிவசக்திக் குமரய்யா! - உன்
அருளைத் தந்தால் களித்திருப்பேன்
சிவசக்திக் குமரய்யா!
நாடிச் செல்லயாரும் இல்லை
சிவசக்திக் குமரய்யா!-உன்
நல்லடி பற்றி நலம்பெறுவேன்
சிவசக்திக் குமரய்யா!
கூடும் ஆசை ஏதும் இல்லை
சிவசக்திக் குமரய்யா! -உன்
குறுநகை கண்டால் மகிழ்ந்திருப்பேன்
சிவசக்திக் குமரய்யா!
சூடும் மலரில் ஒன்றாவேனோ
சிவசக்திக் குமரய்யா - உன்
சுந்தரத் தோளில் இளைப்பாறேனோ
சிவசக்திக் குமரய்யா!
வருவாய் வருவாய் என்றிருந்தேன்
சிவசக்திக் குமரய்யா! -உன்
வரவில் நானும் உயிர்த்திருப்பேன்
சிவசக்திக் குமரய்யா!
ஒருநாள் உனைநான் கண்டால்போதும்
சிவசக்திக் குமரய்யா!
திருநாள் அதிலே முழுதாய் வாழ்வேன்
சிவசக்திக் குமரய்யா!
-இந்துமகேஷ்
18.05.2004
Subscribe to:
Post Comments (Atom)
என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.
என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...
-
நீராடும் கண்களிலே நிழலாடும் தாய்மடியை நினைவூட்ட வந்த அழகே! நிலைமாறும் வாழ்வினிலே நிலையாக நின்னருளை நித்தமும் பொழியும் மழையே! சீரோ...
-
ஒருநாள் இருநாள் உளதா வாழ்வு? உனதாய் உயிராய் நிறைந்த தென் வாழ்வு! கருவாய் மிதந்தேன் உருவாய் தவழ்ந்தேன் கழலே நினைந்து தவமே புரிந்தேன்! அழகா! க...
-
துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன் துதிக்கையான் திருக்கோயில் தனை நாடினேன் -இந்துமகேஷ் துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன் துதிக்கையான் திர...
No comments:
Post a Comment