
குருவாகி வந்தருள்வாய்
குகனே சண்முகனே
குன்றம்வளர் பேரொளியே
தாள்பணிந்தோம் சரணம்!
தங்கவடிவேலன் அவன் எங்கள் குருசாமி
சங்கரியாள் பாலன் அவன் எங்கள் குருசாமி
சங்கடங்கள் தீர்த்தருள்வான் எங்கள் குருசாமி
சஞ்சலங்கள் நீக்கிடுவான் எங்கள் குருசாமி
அண்டிவந்தால் ஆதரிப்பான் எங்கள் குருசாமி
ஆண்டருள வந்திடுவான் எங்கள் குருசாமி
மண்டியிட்டால் வாழ்வளிப்பான் எங்கள் குருசாமி
மண்ணுலகைக் காப்பவன்தான் எங்கள் குருசாமி
ஓம்முருகா என்று சொன்னால் எங்கள் குருசாமி
ஓடிவந்து துணைபுரிவான் எங்கள் குருசாமி
யாமிருக்கப் பயம் எதற்கு என்பான் குருசாமி
நல்லவர்க்கு நலம் அருள்வான் எங்கள் குருசாமி
-இந்துமகேஷ்
2004.
No comments:
Post a Comment