Wednesday, July 29, 2009

உனைப்பாடும் வரம்தா!










தமிழான குமரா!
உனைப் பாடும் வரம்தா!
சந்ததமும் சிந்தையிலே
நின்றெனை யாள் சண்முகனே!
தமிழான குமரா!
உனைப்பாடும் வரம்தா!

நிலையாத உலகென்று
அறியாது உடல்கொண்டு
நிலம்வந்து போராடினேன்- உன்னை
நினந்தேங்கி தினம் வாடினேன்!

விடையேதும் அறியாத
புதிரான வாழ்வுக்குள்
விதியென்று உயிர் வாடினேன்- உன்னை
விடையென்று மகிழ்ந்தாடினேன்

தமிழான குமரா!
உனைப் பாடும் வரம்தா!
சந்ததமும் சிந்தையிலே
நின்றெனை யாள் சண்முகனே!
தமிழான குமரா!
உனைப்பாடும் வரம்தா!

ஒளியாகி வழியாகி
உணர்வாகி உயிராகி
உலகாளும் உமை மைந்தனே! என்னை
உய்விக்கும் அருள் கந்தனே!

வளர்கின்ற துயரங்கள்
களைந்தெங்கள் வாழ்வுக்கு
வழிகாட்டும் முருகய்யனே! எமை
வாழ்விக்கும் அருள் அய்யனே!






தமிழான குமரா!
உனைப் பாடும் வரம்தா!
சந்ததமும் சிந்தையிலே
நின்றெனை யாள் சண்முகனே!
தமிழான குமரா!
உனைப்பாடும் வரம்தா!



-இந்துமகேஷ்
27.07.2009

No comments:

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...