Sunday, August 16, 2009
உயிர்மெய் நீயே!
கலியுகதெய்வம் கந்தன் நீயே!
கார்த்திகைப் பெண்கள் மைந்தன் நீயே!
கிழக்கில் ஒளிரும் கதிரவன் நீயே!
கீதையின் நாயகன் மருகனும் நீயே!
குறமகள் மணமகன் குமரா நீயே!
கூறிடும் அடியவர் கோனும் நீயே!
கெட்டவைதம்மை அழிப்பவன் நீயே!
கேடிலாமனத்தில் வாழ்பவன் நீயே!
கைலையின் நாயகன்திருமகன் நீயே!
கொடுமைகள் தீய்த்துல காள்பவன் நீயே!
கோயில் கொண்டருள் புரிபவன் நீயே!
கெளரியின் மகனே காத்தருள்வாயே!
-இந்துமகேஷ்.
Subscribe to:
Post Comments (Atom)
என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.
என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...
-
நீராடும் கண்களிலே நிழலாடும் தாய்மடியை நினைவூட்ட வந்த அழகே! நிலைமாறும் வாழ்வினிலே நிலையாக நின்னருளை நித்தமும் பொழியும் மழையே! சீரோ...
-
ஒருநாள் இருநாள் உளதா வாழ்வு? உனதாய் உயிராய் நிறைந்த தென் வாழ்வு! கருவாய் மிதந்தேன் உருவாய் தவழ்ந்தேன் கழலே நினைந்து தவமே புரிந்தேன்! அழகா! க...
-
துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன் துதிக்கையான் திருக்கோயில் தனை நாடினேன் -இந்துமகேஷ் துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன் துதிக்கையான் திர...
No comments:
Post a Comment