Monday, October 17, 2011
எமையாளும் பரமேஸ்வரி
ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி - இந்த
ஜெகம் ஆளும் புவனேஸ்வரி!
ஊராள உலகாள உனையாள எனை ஆள
உறவாகி வந்தாளடி! ஒளியாகி நின்றாளடி!
ஒன்றாகிப் பலவாகி ஒவ்வொன்றும் தானாகி
நின்றாளும் ஜெகதீஸ்வரி! நிலையான ஜோதீஸ்வரி!
ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி - இந்த
ஜெகம் ஆளும் புவனேஸ்வரி!
மண்ணாகி விண்ணாகி வளியாகி ஒளியாகி
புனலான சிவனேஸ்வரி! பொறியாளும் ஞானேஸ்வரி!
எண்ணாகி எழுத்தாகி எழுத்துக்குள் பொருளாகி
எமையாளும் பரமேஸ்வரி! எழிலான பாலேஸ்வரி!
ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி - இந்த
ஜெகம் ஆளும் புவனேஸ்வரி!
தீராத வினையாவும் தீர்த்தெம்மைக் காக்கின்ற
தாயெங்கள் நாகேஸ்வரி! தருவாளே மனநிம்மதி!
திசைமாறிப் போனாலும் எமைவிட்டு நீங்காமல்
சேர்வாளே சர்வேஸ்வரி! சிவனாரின் லிங்கேஸ்வரி!
ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி - இந்த
ஜெகம் ஆளும் புவனேஸ்வரி!
இந்துமகேஷ்
(01.03.2008)
Subscribe to:
Post Comments (Atom)
என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.
என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...
-
நீராடும் கண்களிலே நிழலாடும் தாய்மடியை நினைவூட்ட வந்த அழகே! நிலைமாறும் வாழ்வினிலே நிலையாக நின்னருளை நித்தமும் பொழியும் மழையே! சீரோ...
-
ஒருநாள் இருநாள் உளதா வாழ்வு? உனதாய் உயிராய் நிறைந்த தென் வாழ்வு! கருவாய் மிதந்தேன் உருவாய் தவழ்ந்தேன் கழலே நினைந்து தவமே புரிந்தேன்! அழகா! க...
-
துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன் துதிக்கையான் திருக்கோயில் தனை நாடினேன் -இந்துமகேஷ் துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன் துதிக்கையான் திர...
No comments:
Post a Comment