Monday, October 17, 2011

எமையாளும் பரமேஸ்வரி

























ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி - இந்த
ஜெகம் ஆளும் புவனேஸ்வரி!


ஊராள உலகாள உனையாள எனை ஆள
உறவாகி வந்தாளடி! ஒளியாகி நின்றாளடி!

ஒன்றாகிப் பலவாகி ஒவ்வொன்றும் தானாகி
நின்றாளும் ஜெகதீஸ்வரி! நிலையான ஜோதீஸ்வரி!

ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி - இந்த
ஜெகம் ஆளும் புவனேஸ்வரி!

மண்ணாகி விண்ணாகி வளியாகி ஒளியாகி
புனலான சிவனேஸ்வரி! பொறியாளும் ஞானேஸ்வரி!

எண்ணாகி எழுத்தாகி எழுத்துக்குள் பொருளாகி
எமையாளும் பரமேஸ்வரி! எழிலான பாலேஸ்வரி!

ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி - இந்த
ஜெகம் ஆளும் புவனேஸ்வரி!

தீராத வினையாவும் தீர்த்தெம்மைக் காக்கின்ற
தாயெங்கள் நாகேஸ்வரி! தருவாளே மனநிம்மதி!

திசைமாறிப் போனாலும் எமைவிட்டு நீங்காமல்
சேர்வாளே சர்வேஸ்வரி! சிவனாரின் லிங்கேஸ்வரி!

ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி - இந்த
ஜெகம் ஆளும் புவனேஸ்வரி!



இந்துமகேஷ்
   (01.03.2008)

No comments:

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...