Thursday, November 12, 2020

உள்ளத்தில் உன்னைக் கண்டேன் -இந்துமகேஷ்



.இந்துமகேஷ்





உள்ளத்தில் உன்னைக் கண்டேன்

உன்னிலே என்னைக் கண்டேன்

பிள்ளையார் என எழுந்தாய்

பேரருள் மழை பொழிந்தாய்

பிள்ளையார் என எழுந்தாய்

பேரருள் மழை பொழிந்தாய்



சிவன் உமை செல்வா எந்தன்

சிந்தையில் நீ இருந்தாய்

பவவினை நீக்கி உந்தன்

பதத்திலே என்னை வைத்தாய்!


அருள் ஒளி காட்டி எந்தன்

அகத்திருள் நீக்கிவிட்டாய்

வருந்துயர் யாவினுக்கும்  

மருந்தென நீயிருந்தாய்


பிறந்ததன் பயன் அறிந்தேன்

பிரணவப் பொருள் உணர்ந்தேன்

அருந்தவம் புரிந்திடாமல்

அண்ணலே உனை அறிந்தேன்


கணங்களின் பதியே போற்றி

கருணையின் வடிவே போற்றி

உணர்ந்திடும் அடியார்க்கெல்லாம

உயிரெனத் திகழ்வாய் போற்றி


சீர்நிறை ஒட்டங்கேணி

திருத்தலம் கொண்டாய் போற்றி

பாரெலாம் படைத்துக் காக்கும்

பரமனின் முதல்வா போற்றி


கள்ளமில் மனத்தோர் தம்மைக்

காத்திடும் இறைவா போற்றி

பிள்ளையாரப்பா போற்றி

பிரணவா போற்றி போற்றி!




இந்துமகேஷ்

- 18. 03.2020

No comments:

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...