Sunday, February 28, 2021

உயிரென உள்ளது ஓர் சிவம் ஆனது!

 




உயிரென உள்ளது ஓர் சிவம் ஆனது!

-இந்துமகேஷ்
மாதொருபாகனை மதியணி சடையனை
வானமும் பூமியும் வாழ்த்திடும் தேவனை
சிவசிவ சிவசிவ சிவசிவ எனத்தினம்
சிந்தையில் வைத்திடு தீய்ந்திடும் ஊழ்வினை
மானிட வாழ்விது வருவது போவது
வல்வினையாகவே வளர்வது தேய்வது
ஊனுடல் என்பது ஒன்றும் இல்லாதது
உயிரென உள்ளது ஓர் சிவம் ஆனது!
அரகர சிவசிவ எனத்தினம் சொல்வது
அரனெனும் சிவனவன் அடியினைத் தொடுவது!
வருவது யாவையும் அவனருள் தருவது
வணங்கிடும் அடியவர் துயர்களைக் களைவது!
பகை பிணி நீங்திட பாவங்கள் மாய்ந்திட
உமை மணவாளனை உளத்திலே பதித்திடு
வகை வகையாகவே வரும்துயர் நீக்கிடும்
மாமருந்தாம் அரன் நாமமே போற்றிடு!
அருவுருவானவன் அந்தமில்லாதவன்
அவனியில் உயிர்க்கெல்லாம் ஆதியுமானவன்
திருவுருவாக உன் சிந்தையில் வருபவன்
சிவசிவ சங்கரன் திருவடியே சரண்!
சிவசிவ சங்கர அரகர சங்கர
சிவசிவ சங்கர அரகர சங்கர
சிவசிவ சங்கர அரகர சங்கர
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
பாடலாசிரியர்:
இந்துமகேஷ்

No comments:

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...