Thursday, November 12, 2020

ஆறுமுகன் திருவடிக்கே சரணானது

 

ஆறுமுகன் திருவடிக்கே சரணானது

-இந்துமகேஷ்









மயிலாடுது சேவல் கொடியாடுது
வடிவேலன் திருக்கோயில் மணியாடுது.
வினை ஓடுது பகை ஓடுது - கந்தன்
விழிகாட்டும் கருணையினால் துயர் ஓடுது.
திருமுருகா எனத் தினம் என் நாவாடுது
சேவடியில் பணிந்தெந்தன் சிரம் ஆடுது
அருள்காட்டும் முகம் கண்டென் மனம் ஆடுது
அவன் தோளில் நான் சூட்டும் மலர் ஆடுது
வினை ஓடுது பகை ஓடுது - கந்தன்
விழிகாட்டும் கருணையினால் துயர் ஓடுது.
கோ கோ கோ என்றே குயில் பாடுது
கோ அரனுக் கோ வென்றே சேவல் பாடுது
காவலனே நீயென்று உயிர்கள் பாடுது
காத்திடுவாய் உலகையென்றென் உளம் பாடுது
வினை ஓடுது பகை ஓடுது - கந்தன்
விழிகாட்டும் கருணையினால் துயர் ஓடுது.
ஆடுதலும் பாடுதலும் அழகானது
ஆறுமுகன் திருவடிக்கே சரணானது
தேடுதலும் நாடுதலும் முடிவானது
தெளிந்தவர்க்கு ஞானமவன் வடிவானது.
இந்துமகேஷ்
(15.12.2017)



No comments:

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...