Friday, January 18, 2008

எப்பொழுதும் துணையிருக்கும் சுப்ரமண்யம்












சுப்ரமண்யம் பால சுப்ரமண்யம்
சுப்ரமண்யம் பால சுப்ரமண்யம்
சுப்ரமண்யம் பால சுப்ரமண்யம்

அப்பனுக்குக் குருவான சுப்ரமண்யம்
- பாலசுப்ரமண்யம் -என்
அகத்திருளைப் போக்கவந்த சுப்ரமண்யம்
- பால சுப்ரமண்யம்
எப்பொழுதும் துணையிருக்கும் சுப்ரமண்யம்
- பால சுப்ரமண்யம் -என்
இன்னல்களை நீக்கவந்த சுப்ரமண்யம்
-பால சுப்ரமண்யம்


பக்திநெறி அறிவித்த சுப்ரமண்யம்
- பால சுப்ரமண்யம் -என்
பாவந்தனை வேரறுக்கும் சுப்ரமண்யம்
- பால சுப்ரமண்யம்
சித்திதனை அள்ளித்தரும் சுப்ரமண்யம்
-பால சுப்ரமண்யம் -என்
சிந்தையிலே ஒளியாகும் சுப்ரமண்யம்
-பால சுப்ரமண்யம்.


நல்லவர்க்கு நலம் அருளும் சுப்ரமண்யம்
- பால சுப்ரமண்யம் -என்
ஞானகுரு என ஒளிரும் சுப்ரமண்யம்
- பால சுப்ரமண்யம்
தொல்லைகளைக் களைகின்ற சுப்ரமண்யம்
- பால சுப்ரமண்யம் -என்
தூயமனக் கோயில் கொண்ட சுப்ரமண்யம்
-பால சுப்ரமண்யம்



-இந்துமகேஷ்
(30.04.2004)










No comments:

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...