Sunday, January 13, 2008
கண்டாயா மனமே கண்டாயா
கண்டாயா கண்டாயா கண்டாயா
கந்தய்யனைக் கண்டாயா கண்குளிரக் கண்டாயா
கண்டாயா கண்டாயா கண்டாயா
ஆடும்மயில் ஏறிவரும் அப்பய்யனைக் கண்டாயா
சூழும்வினை தீர்க்கவரும் சுப்பய்யனைக் கண்டாயா
வள்ளிமனம் கொள்ளைகொண்ட வேலய்யனைக் கண்டாயா
வாழ்வுதர வந்தசிவ பாலய்யனைக் கண்டாயா
நீலகண்டன் தந்தநெற்றிக் கண்ணய்யனைக் கண்டாயா
நெஞ்சமெல்லாம் கோயில்கொண்ட சின்னய்யனைக் கண்டாயா
துள்ளிவரும் பகைமுடித்த வீரய்யனைக் கண்டாயா
சூரர்தமை வேரறுத்த குமரய்யனைக் கண்டாயா
ஆதிசக்தி மடிதவழ்ந்த அழகய்யனைக் கண்டாயா
ஆறுமுக சாமிஎங்கள் அருளய்யனைக் கண்டாயா
வித்தைகளைக் கற்றுத்தரும் முத்தய்யனைக் கண்டாயா
வேதத்துக்குப் பொருளுரைத்த சித்தய்யனைக் கண்டாயா
சூரியனைப் போல்ஒளிரும் பொன்னய்யனைக் கண்டாயா
துன்பஇருள் துடைக்கவந்த என்னய்யனைக் கண்டாயா
பிறேமனிலும் சிவசக்திக் குமரய்யனைக் கண்டாயா
பேரருளை அள்ளித்தரும் நல்லய்யனைக் கண்டாயா
கண்டாயா மனமே கண்டாயா
கண்டாயா மனமே கண்டாயா
கண்டாயா மனமே கண்டாயா
-இந்துமகேஷ்
(12.03.2004)
Subscribe to:
Post Comments (Atom)
என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.
என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...
-
நீராடும் கண்களிலே நிழலாடும் தாய்மடியை நினைவூட்ட வந்த அழகே! நிலைமாறும் வாழ்வினிலே நிலையாக நின்னருளை நித்தமும் பொழியும் மழையே! சீரோ...
-
ஒருநாள் இருநாள் உளதா வாழ்வு? உனதாய் உயிராய் நிறைந்த தென் வாழ்வு! கருவாய் மிதந்தேன் உருவாய் தவழ்ந்தேன் கழலே நினைந்து தவமே புரிந்தேன்! அழகா! க...
-
துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன் துதிக்கையான் திருக்கோயில் தனை நாடினேன் -இந்துமகேஷ் துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன் துதிக்கையான் திர...
No comments:
Post a Comment