Friday, November 16, 2007

வேலைப் பிடித்தவன் காலைப் பிடித்திடு!











வேலைப் பிடித்தவன் காலைப் பிடித்திடு
வேதனை ஓடிவிடும் - உனை
வெற்றிகள் தேடிவரும்- வடி
வேலைப் பிடித்தவன் காலைப் பிடித்திடு

நாளை நாளை என்று நம்பியிருந்தாலே
ஞானம் பிறப்பதில்லை -அதில்
நன்மைகள் ஏதுமில்லை- இவன்
தாளைப் பிடித்தபின் நாளை எனஒரு
நாளும் இருப்பதில்லை - நிகழ்
காலம் மறைவதில்லை

வேலைப் பிடித்தவன் காலைப் பிடித்திடு
வேதனை ஓடிவிடும் - உனை
வெற்றிகள் தேடிவரும்- வடி
வேலைப் பிடித்தவன் காலைப் பிடித்திடு

கூடும் வினைதனை வேரறுப்பான் -இனி
குற்றங்கள் ஏதுமில்லை -கொடுங்
கூற்றுவன் ஆட்சியில்லை -இவன்
ஆடும் மயிலினில் ஏறிவருகையில்
ஆனந்தம் வேறு இல்லை- இனி
ஆசைகள் ஏதுமில்லை

வேலைப் பிடித்தவன் காலைப் பிடித்திடு
வேதனை ஓடிவிடும் - உனை
வெற்றிகள் தேடிவரும்- வடி
வேலைப் பிடித்தவன் காலைப் பிடித்திடு

-இந்துமகேஷ்
(14.05.2004)

No comments:

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...