Thursday, November 15, 2007

ஒளி நிறைந்தது!













நீலமயில் ஆடிவரும் நேரம் வந்தது
நெற்றிக் கண்ணன் மகன்அருளும் காலம் வந்தது
சோலைமலர் பூக்களெல்லாம் சுகமடைந்தது
சுந்தரவேல் முருகன்தோளைத் தொட்டுக் கொண்டது

பாடிவரும் மனங்களெல்லாம் பக்திகொண்டது
பரமகுரு திருவடியைப் பணிந்துகொண்டது
கூடிவந்த துன்பமெல்லாம் எட்டிச்சென்றது
குமரன்விழி பார்த்ததனால் வினை அகன்றது

ஆசையெனும் நோய் தணிந்து அன்பு வென்றது
அருள்முருகன் பார்வையினால் துயர் அகன்றது
வேசமென்னும் மாயையெல்லாம விலகிச்சென்றது
வேல்முருகன் அருள்கனிந்து வினைகள் மாய்ந்தது

பொய்மைகொண்ட காலமெல்லாம் போயொழிந்தது
பொன்னடிக்குள் எந்தனுயிர் போய்ப் புகுந்தது
வையகத்து உயிர்கட்கெல்லாம் வழிபிறந்தது
வண்ணமயில் வாகன்அருள் ஒளிநிறைந்தது.

-இந்துமகேஷ்
(18.05.2004)

No comments:

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...