ஓம் முருகா என்றுருகி
உனக்காகப் பாடுகிறேன்
உன்னடியைக் காண்பதற்கே
உயிர்சுமந்து வாடுகிறேன்
கண்ணிரண்டும் பெற்ற பலன்
கந்தன் முகம் கண்டது - நான்
காதிரண்டும் பெற்ற பலன்
கந்தன் புகழ் கேட்டது
கையிரண்டும் பெற்றபலன்
கந்தனுக்காய் குவிந்தது நான்
காலிரண்டும் பெற்ற பலன்
கந்தனிடம் சென்றது
வாயினாலே பெற்றபலன்
கந்தன் பெயர் சொன்னது - நான்
வாழுகின்ற மூச்சின் பலன்
கந்தனுக்காய் உயிர்த்தது
சிரத்தினாலே பெற்ற பலன்
கந்தனுக்காய் பணிந்தது - நான்
சிந்தையாலே பெற்ற பலன்
கந்தனையே நினைத்தது
மேனியாலே பெற்ற பலன்
கந்தன் தொண்டு ஆனது - நான்
மேதினியில் பிறந்த பலன்
கந்தனாலே நிறைந்தது.
-இந்துமகேஷ்
02.07.2004
Thursday, February 01, 2007
உனக்காகப் பாடுகிறேன்
Subscribe to:
Post Comments (Atom)
என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.
என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...
-
நீராடும் கண்களிலே நிழலாடும் தாய்மடியை நினைவூட்ட வந்த அழகே! நிலைமாறும் வாழ்வினிலே நிலையாக நின்னருளை நித்தமும் பொழியும் மழையே! சீரோ...
-
ஒருநாள் இருநாள் உளதா வாழ்வு? உனதாய் உயிராய் நிறைந்த தென் வாழ்வு! கருவாய் மிதந்தேன் உருவாய் தவழ்ந்தேன் கழலே நினைந்து தவமே புரிந்தேன்! அழகா! க...
-
துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன் துதிக்கையான் திருக்கோயில் தனை நாடினேன் -இந்துமகேஷ் துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன் துதிக்கையான் திர...
No comments:
Post a Comment