Thursday, February 01, 2007

உனக்காகப் பாடுகிறேன்


ஓம் முருகா என்றுருகி
உனக்காகப் பாடுகிறேன்
உன்னடியைக் காண்பதற்கே
உயிர்சுமந்து வாடுகிறேன்

கண்ணிரண்டும் பெற்ற பலன்
கந்தன் முகம் கண்டது - நான்
காதிரண்டும் பெற்ற பலன்
கந்தன் புகழ் கேட்டது

கையிரண்டும் பெற்றபலன்
கந்தனுக்காய் குவிந்தது நான்
காலிரண்டும் பெற்ற பலன்
கந்தனிடம் சென்றது

வாயினாலே பெற்றபலன்
கந்தன் பெயர் சொன்னது - நான்
வாழுகின்ற மூச்சின் பலன்
கந்தனுக்காய் உயிர்த்தது

சிரத்தினாலே பெற்ற பலன்
கந்தனுக்காய் பணிந்தது - நான்
சிந்தையாலே பெற்ற பலன்
கந்தனையே நினைத்தது

மேனியாலே பெற்ற பலன்
கந்தன் தொண்டு ஆனது - நான்
மேதினியில் பிறந்த பலன்
கந்தனாலே நிறைந்தது.

-இந்துமகேஷ்
02.07.2004


No comments:

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...