Monday, January 29, 2007
காதலினால் உருகுகிறேன்
காணிக்கை தர எந்தன் கண்ணீரே போதாதா?
கந்தா உன் மனமிரங்கி கருணை செய்தால் ஆகாதா?
ஏதுக்கோ வாழ்வென்று இதுவரையில் புரியவில்லை
இன்றுன்னை நானறிந்தேன் இனி எனக்கோர் துயரில்லை
வீணுக்காய் நானலைந்து வீழ்ந்த கதை போதுமையா
வேலவனே உன்னால் நான் மீண்டும் எழ வேண்டுமையா!
வானகத்துத் தேவருக்கும் வதைசெய்த சூரருக்கும்
நீயளித்த கருணையது நெஞ்சமதை உருக்குதையா
கானகத்து வள்ளிக்கும் கரம்கொடுத்த மணவாளா
காதலினால் உருகுகிறேன் கண்டுமனம் இளகாதா
சிவசக்திக்குமரா உன் திருவடியைப் பற்றுகிறேன்
தினந்தோறும் உன்பெயரே உச்சரித்துக் கரைகின்றேன்
தவக்கோலம் கொள்ளாமல் சன்னதிக்கு வருகின்றேன்
சஞ்சலங்கள் தீர்த்தெமக்கு சாந்தி தர மாட்டாயா!
-இந்துமகேஷ்
(16.03.2004)
Subscribe to:
Post Comments (Atom)
என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.
என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...
-
நீராடும் கண்களிலே நிழலாடும் தாய்மடியை நினைவூட்ட வந்த அழகே! நிலைமாறும் வாழ்வினிலே நிலையாக நின்னருளை நித்தமும் பொழியும் மழையே! சீரோ...
-
ஒருநாள் இருநாள் உளதா வாழ்வு? உனதாய் உயிராய் நிறைந்த தென் வாழ்வு! கருவாய் மிதந்தேன் உருவாய் தவழ்ந்தேன் கழலே நினைந்து தவமே புரிந்தேன்! அழகா! க...
-
துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன் துதிக்கையான் திருக்கோயில் தனை நாடினேன் -இந்துமகேஷ் துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன் துதிக்கையான் திர...
No comments:
Post a Comment