
மனதோடு உறவாட மயிலேறி வருவான்
வடிவேலன் துணையாகி அருள்மாரி பொழிவான்
குறமாது மணவாளன் குடிகொண்ட பின்னே
குறையேது புவிமேதில் நீயாறு மனமே
நீயாறு மனமே நீயாறு மனமே
நீயாறு மனமே நீபாடு தினமே!
தொடர்கின்ற வினையோடு சுகம் காணுவாயோ
துணையாக வரும் வேலன் முகம் காணுவாயோ
இடர்கண்டு மனம் நொந்து உயிர் நீங்குவாயோ
இருள் நீக்கும் அருள் நாதன் பதம் தாங்குவாயோ
குறமாது மணவாளன் குடிகொண்ட பின்னே
குறையேது புவிமேதில் நீயாறு மனமே
நீயாறு மனமே நீயாறு மனமே
நீயாறு மனமே நீபாடு தினமே!
வளர்கின்ற பொழுதாகி வாழ்கின்ற காலம்
மறைகின்ற பொழுதொன்றில் எதுவந்து சேரும்
முருகா என்றழைத்தாலே உனைவந்து காக்கும்
முகம் ஆறுமுகம் அன்றி துணையேதுயார்க்கும்
குறமாது மணவாளன் குடிகொண்ட பின்னே
குறையேது புவிமேதில் நீயாறு மனமே
நீயாறு மனமே நீயாறு மனமே
நீயாறு மனமே நீபாடு தினமே!
மனதோடு உறவாட மயிலேறி வருவான்
வடிவேலன் துணையாகி அருள்மாரி பொழிவான்
-இந்துமகேஷ்
19.03.2004
No comments:
Post a Comment