Monday, February 19, 2007

குருவாய் நீ வந்தருள் செய்தால்...









கந்தனின் நாமமே கருணை என்றாகும்
கந்தனின் நாமமே கவலைகள் போக்கும்
கந்தனின் நாமமே இன்பம் என்றாகும்
கந்தனின் நாமமே இன்னல்கள் போக்கும்
கந்தனின் நாமமே உலகம்என்றாகும்
கந்தனின் நாமமே உன்னுயிர் காக்கும்


ஒரு நாமம் அறிந்தேன்ஓம் ஓம்
ஓம் என்று உனைநான் பணிந்தேன்
முருகா உன் திருமுகம் கண்டேன்
முக்திக்கொரு வழியினைக் கண்டேன்

திருவாயில்சிந்திடும் புன்னகை
தீவினைகள் எரித்தெனைக் காக்கும்
குருவாய் நீ வந்தருள் செய்தால்
அருள்ஞானம் எனக்குள் பூக்கும்

கருவாய் நான் உயிர்கொண்டபோதே
கந்தா நீ என்னுடன் இருந்தாய்
உருவாய் நான் உலகினைக்கண்டேன்
உலகெங்கும் நீயெனக் கண்டேன்

அருள்வாய்நீ என்றுன்னைத் தொழுதால்
அல்லல்கள் விட்டெமை நீங்கும்
பெருவாழ்வைத் தருபவன்நீயே
பேரின்பப் பெரும்பொருள் நீயே!


-இந்துமகேஷ்
27.06.2004

No comments:

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...