Monday, July 31, 2006
சந்நிதியில் புரள்கின்றேன்
முருகா முருகா முருகா என்று
முப்பொழுதும் அழைக்கின்றேன்
வருவாய் முருகா அருள்வாய் என்று
வாழும் நாளைக் கழிக்கின்றேன்
திருமால் மருகா குமரா என்றுன்
சேவடியைத் துதிக்கின்றேன்
சிந்தைக் கினியோய் அருள்வாய் என்று
தினமும் வழியைப் பார்க்கின்றேன்
அருவாய் உருவாய் தெரிவாய் உனையே
அனுதினமும் நினைக்கின்றேன்
திருவாய் மலரும் சிரிப்பின் அழகில்
தினமும் என்னை மறக்கின்றேன்
கருவாய் உருவாய் ஆனேன் எனையே
காலடியில் தருகின்றேன்
குருவாய் வருவாய் அருள்வாய்என்று
குவலயத்தில் அலைகின்றேன்
சருகாய் புவியில் சரியும் முன்னே
சரவணனைப் பணிகின்றேன்
தருவாய் நலமே தவமே என்று
சந்நிதியில் புரள்கின்றேன்.
-இந்துமகேஷ்
(13.05.2004)
Subscribe to:
Post Comments (Atom)
என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.
என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...
-
நீராடும் கண்களிலே நிழலாடும் தாய்மடியை நினைவூட்ட வந்த அழகே! நிலைமாறும் வாழ்வினிலே நிலையாக நின்னருளை நித்தமும் பொழியும் மழையே! சீரோ...
-
ஒருநாள் இருநாள் உளதா வாழ்வு? உனதாய் உயிராய் நிறைந்த தென் வாழ்வு! கருவாய் மிதந்தேன் உருவாய் தவழ்ந்தேன் கழலே நினைந்து தவமே புரிந்தேன்! அழகா! க...
-
துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன் துதிக்கையான் திருக்கோயில் தனை நாடினேன் -இந்துமகேஷ் துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன் துதிக்கையான் திர...
No comments:
Post a Comment