Friday, July 07, 2006
வரும் உந்தன் அன்பே மெய்யே!
திருப்புகழைப் பாடிப் பாடி
தினந்தோறும் உன்முகம் தேடி
உருகுகிறோம் ஒன்றாய்க் கூடி
ஓம் முருகா வருவாய் ஓடி!
வாழ்க்கை இது பொய்யே பொய்யே
வரும் உந்தன் அன்பே மெய்யே
காக்கும் சிவசக்தியின் சேயே
கந்தா நீ வந்தருள் வாயே!
ஆதாரம் நீஎன் றறிந்தோம்
அன்பாலே தினம் உனைப் பணிந்தோம்
தீதெல்லாம் மாய்ந்திடக் கண்டோம்
திருவடியே சரண் என விழுந்தோம்
பொருளோடு புகழும் வாழ்வும்
பொய்யென்று ஒருநாள் ஆகும்
அருள்தந்து எம்மைக் காக்கும்
அறுமுகமே நிலையென் றாகும்!
வருவதெல்லாம் உன்னால் தானே
வந்தருள்வாய் எழில்முரு கோனே
கருணையினால் வினையறுப் போனே
காத்திடுவாய் எங்களைத் தானே!
-இந்துமகேஷ்
(15.11.2004)
Subscribe to:
Post Comments (Atom)
என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.
என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...
-
நீராடும் கண்களிலே நிழலாடும் தாய்மடியை நினைவூட்ட வந்த அழகே! நிலைமாறும் வாழ்வினிலே நிலையாக நின்னருளை நித்தமும் பொழியும் மழையே! சீரோ...
-
ஒருநாள் இருநாள் உளதா வாழ்வு? உனதாய் உயிராய் நிறைந்த தென் வாழ்வு! கருவாய் மிதந்தேன் உருவாய் தவழ்ந்தேன் கழலே நினைந்து தவமே புரிந்தேன்! அழகா! க...
-
துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன் துதிக்கையான் திருக்கோயில் தனை நாடினேன் -இந்துமகேஷ் துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன் துதிக்கையான் திர...
No comments:
Post a Comment