
திருப்புகழைப் பாடிப் பாடி
தினந்தோறும் உன்முகம் தேடி
உருகுகிறோம் ஒன்றாய்க் கூடி
ஓம் முருகா வருவாய் ஓடி!
வாழ்க்கை இது பொய்யே பொய்யே
வரும் உந்தன் அன்பே மெய்யே
காக்கும் சிவசக்தியின் சேயே
கந்தா நீ வந்தருள் வாயே!
ஆதாரம் நீஎன் றறிந்தோம்
அன்பாலே தினம் உனைப் பணிந்தோம்
தீதெல்லாம் மாய்ந்திடக் கண்டோம்
திருவடியே சரண் என விழுந்தோம்
பொருளோடு புகழும் வாழ்வும்
பொய்யென்று ஒருநாள் ஆகும்
அருள்தந்து எம்மைக் காக்கும்
அறுமுகமே நிலையென் றாகும்!
வருவதெல்லாம் உன்னால் தானே
வந்தருள்வாய் எழில்முரு கோனே
கருணையினால் வினையறுப் போனே
காத்திடுவாய் எங்களைத் தானே!
-இந்துமகேஷ்
(15.11.2004)
No comments:
Post a Comment