
ஐந்துகரம் கொண்டதொரு பிள்ளைமுகம் கண்டபின்பு
ஆசைகளை விட்டதடா நெஞ்சம் .இனி
அவனடியில் என்னுயிரே தஞ்சம்
விந்திலொரு கருவாகி வேடமிட்டு வந்த எனை
வேழமுகத்தான் வந்து காத்தான் -மன
வேதனைகள் யாவையுமே நீத்தான்
நொந்துமனம் வேகாமல் நுண்ணறிவு சாகாமல்
நோயகல மருந்தாக வந்தான் - ஒரு
யோகநிலை தானாகி நின்றான்
வெந்தழிந்து போகுமுடல் மீளாது எந்தனுயிர்
மீளவொரு வழியதனைக் கண்டேன் - அருள்
வேழமுகத்தைப் பற்றிக் கொண்டேன்.
-இந்துமகேஷ்.
(16.11.2004)
No comments:
Post a Comment