Friday, July 07, 2006
வேழமுகத்தான் வந்து காத்தான்.
ஐந்துகரம் கொண்டதொரு பிள்ளைமுகம் கண்டபின்பு
ஆசைகளை விட்டதடா நெஞ்சம் .இனி
அவனடியில் என்னுயிரே தஞ்சம்
விந்திலொரு கருவாகி வேடமிட்டு வந்த எனை
வேழமுகத்தான் வந்து காத்தான் -மன
வேதனைகள் யாவையுமே நீத்தான்
நொந்துமனம் வேகாமல் நுண்ணறிவு சாகாமல்
நோயகல மருந்தாக வந்தான் - ஒரு
யோகநிலை தானாகி நின்றான்
வெந்தழிந்து போகுமுடல் மீளாது எந்தனுயிர்
மீளவொரு வழியதனைக் கண்டேன் - அருள்
வேழமுகத்தைப் பற்றிக் கொண்டேன்.
-இந்துமகேஷ்.
(16.11.2004)
Subscribe to:
Post Comments (Atom)
என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.
என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...
-
நீராடும் கண்களிலே நிழலாடும் தாய்மடியை நினைவூட்ட வந்த அழகே! நிலைமாறும் வாழ்வினிலே நிலையாக நின்னருளை நித்தமும் பொழியும் மழையே! சீரோ...
-
ஒருநாள் இருநாள் உளதா வாழ்வு? உனதாய் உயிராய் நிறைந்த தென் வாழ்வு! கருவாய் மிதந்தேன் உருவாய் தவழ்ந்தேன் கழலே நினைந்து தவமே புரிந்தேன்! அழகா! க...
-
துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன் துதிக்கையான் திருக்கோயில் தனை நாடினேன் -இந்துமகேஷ் துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன் துதிக்கையான் திர...
No comments:
Post a Comment