Tuesday, May 30, 2006

அரகர முருகா! எனை யாளும் சண்முகா!





அரகர முருகா
எனை யாளும் சண்முகா!


அரகர சிவ சிவ சண்முக நாதா
ஆண்டருள் செய்திட அருகினில் வாவா!

இருவினை களைந்திடும் என்குரு நாதா
ஈடிலா நின்பதம் பெற அருள் தாதா!

அரகர முருகா
எனை யாளும் சண்முகா!

உலகினைக் காத்திடும் உயர்கும ரேசா
ஊழியம் புரிந்திடும் அடியவர் நேசா!

எளியவர்க் கிரங்கிடும் என்குரு நாதா
ஏழையென் பால் உந்தன் மனமிளகாதா?

அரகர முருகா
எனை யாளும் சண்முகா!

ஐங்கரன் தம்பியே அருள்வடி வேலா!
ஐயமில் லாதொரு வாழ்வினைத் தாதா!

ஒருமுக மாகிய அறுமுக வேலா
ஓய்ந்திடு முன்எனைக் காத்திட வாவா!

அரகர முருகா
எனை யாளும் சண்முகா!

ஒளவைக்கு ஞானத்தை வழங்கிய பாலா
அருள்விழி காட்டிஎன் துயரகற் றாயா!

அரகர சிவசிவ சண்முக நாதா!
ஆண்டருள் செய்திட அருகினில் வாவா!

அரகர முருகா
எனை யாளும் சண்முகா!


-இந்துமகேஷ் 2004

(பிறேமனில் கோயில்கொண்ட அருள்மிகு சிவசக்திக்குமரனை நினைந்து எழுதிய பஜனைப் பாடல்)

No comments:

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...