Monday, May 08, 2006
கந்தனை நினைந்து...
காலமெல்லாம் உந்தன் புகழ்பாட
கருணை புரிவாய் கதிர்காமா!
ஞாலம் படைத்துக் காப்பவனே
நல்லோர்க் கருளும் நல்லூரானே!
சந்ததம் உன்னைச்
சிந்தையில் வைத்தால்
தருவாய் சுகமே
சந்நிதியானே -செல்வச்
சந்நிதியானே
வந்தமர் குன்றம்
வளமிகு சோலை
வாழ்திருத் தணிகை
நின்றிடுவோனே - இன்பம்
தந்திடுவோனே
காலமெல்லாம் உந்தன் புகழ்பாட
கருணை புரிவாய் கதிர்காமா!
கல்மனம் கொண்ட
புல்லரும் உந்தன்
கழலே தொழுதே
கனிந்திடுவாரே - துன்பம்
களைந்திடுவாரே
எல்லையே இல்லா
அன்பினால் என்றும்
இன்னருள் புரியும்
மால்மருகோனே - திரு
மால்மருகோனே
காலமெல்லாம் உந்தன் புகழ்பாட
கருணை புரிவாய் கதிர்காமா!
(இந்துமகேஷ் -1992கார்த்திகை)
Subscribe to:
Post Comments (Atom)
என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.
என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...
-
நீராடும் கண்களிலே நிழலாடும் தாய்மடியை நினைவூட்ட வந்த அழகே! நிலைமாறும் வாழ்வினிலே நிலையாக நின்னருளை நித்தமும் பொழியும் மழையே! சீரோ...
-
ஒருநாள் இருநாள் உளதா வாழ்வு? உனதாய் உயிராய் நிறைந்த தென் வாழ்வு! கருவாய் மிதந்தேன் உருவாய் தவழ்ந்தேன் கழலே நினைந்து தவமே புரிந்தேன்! அழகா! க...
-
துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன் துதிக்கையான் திருக்கோயில் தனை நாடினேன் -இந்துமகேஷ் துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன் துதிக்கையான் திர...
No comments:
Post a Comment